ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச்செயலாளர் நியமனம்
திருக்கோவிலுார்; ஐ.ஜே.கே., மாநில துணைப் பொதுச் செயலாளராக திருக்கோவிலுாரை சேர்ந்த செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜே.கே., விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவராக இருப்பவர் மணம்பூண்டியைச் சேர்ந்த செந்தில்குமார். பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளராகவும் உள்ளார். இவரை ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் ஐ.ஜே.கே., மாநிலத் துணை பொதுச் செயலாளராக நியமித்து உள்ளனர்.