மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
22-Apr-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பூட்டிய வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார், கீழையூர், வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சமுத்திரம் மகன் பிரகாஷ், 30; கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு சென்றார்.கடந்த 22ம் தேதி காலை வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 3 சவரன் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது. திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Apr-2025