உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாணவர்கள் தேர்வு

கள்ளக்குறிச்சி:மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கடந்த ஆக., மாதம் 14ம் தேதி சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கு 4 பிரிவுகளாக போட்டி நடந்தது. ஒவ்வொறு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், புல்லங்குடி தனியார் கல்லுாரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வரும் 11ம் தேதி நடக்கிறது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தேர்வான 24 மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் 5 இடங்களில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக தேசிய அளவில் நடக்கும் சதுரங்க போட்டியில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை