சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி, ; மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், பொதுமக்களுக்கான பொது, குடிநீர், இடம் தொடர்பான பிரச்னைகள், ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சட்டம் ஒழுங்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ள பிரச்னைகள் குறித்து காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.பின் சட்டம் ஒழுங்கை சீராக பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.