உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுதந்திர தினத்தையொட்டி நாளை மதுபான கடைகள், பார்கள் மூடல்

சுதந்திர தினத்தையொட்டி நாளை மதுபான கடைகள், பார்கள் மூடல்

கள்ளக்குறிச்சி : சுதந்திர தினத்தையொ ட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து மதுபான கூடங்களும் நாளை மூடப்படும் எனவும், மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (15ம் தேதி), கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள உள்ள மதுபான பார்கள், தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். நாளை மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தால், டாஸ்மாக் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கை மேற்கொண்டு, உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை