மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
19-Nov-2024
கச்சிராயபாளையம்; எலியத்துார் கிராமத்தில் முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 65; இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த கருணாகரன் மனைவி பெரியநாயகம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பெரியநாயகத்திற்கு ஆதரவாக தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 42, என்பவர் தாக்கியதில் பெருமாள் படுகாயமடைந்தார்.இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து துரையை கைது செய்தனர்.
19-Nov-2024