மதுவில் விஷம் கலந்து குடித்தவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி; மதுபானத்தில் விஷம் கலந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராஜா, 40; மதுபழக்கம் உடையவர். கடந்த ஜூன் 21ம் தேதி அளவுக்கு அதிகமான மதுபானம் குடித்த ராஜா, வீட்டிலிருந்த விஷ மருந்தினையும், மதுவில் கலந்து குடித்தார். அவரது உறவினர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.