மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி
20-Aug-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் பகுதி செல்வம்,50; இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் நித்தின்குமார்,25; என்பவருடன் பைக்கில் கடந்த 1 ம் தேதி இரவு 10 மணிக்கு கூத்தக்குடி சென்றார். நாகலுார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது பைக் பின்னால் அமர்ந்திருந்த செல்வம் திடீரென கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வத்தை கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 2.25 மணியளவில் அவர் இறந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் நித்தின்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Aug-2025