கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் உற்சவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து கோவில் உட்பிரகாரம் வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். மணவாள மாமுனிகள் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கும் உற்சவத்தில் பெருமாள், தாயாருக்கு சாற்றுமுறை, சேவை, ஆராதனம் நடத்தி, விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்கள் ஜெபித்து, உபசார பூஜைகளுடன் மண்டபகபடி செய்து வைக்கப்படுகிறது.