சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சாலையோர பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும், இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லுாரி உள்ளதால் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இந்நிலையில் தியாகதுருகம் சாலையில், சாலையோரம் உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையில் கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திசெல்லும் தருணத்தில் சாலையோர பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே தியாகதுருகம் சாலையில், சாலையோரம் மண்களை கொட்டி சமப்படுத்தி விபத்துகள் தடுக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.