தமிழில் பெயர் பலகை : நகராட்சி ஆலோசனை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக வணிகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். ஆணையர் திவ்யா வரவேற்றார்.துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். வணிகர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பெயர் பலகையை மாற்றி அமைக்க விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக வணிகர்கள் உறுதியளித்தனர்.