மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
24-Jun-2025
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க.. சார்பில் நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் பழனிச்சாமி வழங்கினார். உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில் குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் துரை வரவேற்றார். பொதுச்செயலாளர் பழனிச்சாமி, 126, அடி உயர கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 5,771 பேருக்கு நலத்திட்ட உதவி மற்றும் அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற, 20 மாணவ, மாணவியருக்கு 'லேப்டாப்'களை வழங்கினார்.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேல் பாபு, மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், மாவட்ட ஜெ.. பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அவை தலைவர் பச்சையாபிள்ளை, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞரணி பொருளாளர் வெற்றிவேல், பாசறை செயலாளர் வினோத், பாசறை தலைவர் வெங்கடாஜலபதி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி, ஒன்றிய செயலாளர்கள் செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், ராஜசேகர், கதிர்தண்டபாணி, அருணகிரி, பழனி, பழனிச்சாமி, சந்தோஷ், சேகர், தேவந்திரன், ஐயப்பா, ராஜேந்திரன், நகர செயலாளர்கள் பாபு, ராகேஷ், ஷியாம் சுந்தர், விநாயகா கல்வி குழும தலைவர் நமச்சிவாயம், நகராட்சி கவுன்சிலர் தமிழரசிதுரை, வழக்கறிஞர்கள் திலீப், செந்தில்குமார், நகர துணை செயலாளர் கோபால், விவசாய அணி செயலாளர் கருணாநிதிசோழன், தகவல் தொழில்நுட்ப அணி சாய்அருண், பேரவை செயலாளர் வெற்றி, வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
24-Jun-2025