உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் ரங்கநாதன், 55; என்பவரின் மளிகை கடையில் திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா 25 பாக்கெட்கள் இருப்பது தெரிய வந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரங்கநாதனை கைது செய்தனர். சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை