உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி மாணவி மாயம்  போலீஸ் விசாரணை 

பள்ளி மாணவி மாயம்  போலீஸ் விசாரணை 

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனியைச் சேர்ந்தவர் 16 வயது பிளஸ் 1 மாணவி. இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி