அரசு பள்ளிக்கு வேன்கள் வழங்கல்
கச்சிராயபாளையம், : இன்னாடு அரசு பழங்குடியினர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வேன்களை கலெக்டர் துவங்கி வைத்தார்.கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் அரசு பழங்குடியினர் ஆரம்பப்பள்ளி உள்ளது. 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் 2 புதிய டாடா மேஜிக் வேன்கள் வழங்கப்பட்டது.கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்து வேன்களை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம், தாசில்தார் கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.