உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்

ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதியில் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நடந்தது. சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் திருமலை தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மொபைல் எண் மாற்றம், குடும்ப உறுப்பினர் மாற்றம் உள்ளிட்ட 21 மனுக்கள் பெறப்பட்டன. கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் தனி தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். மின்னணு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், உறுப்பினர்கள் பெயர் நீக்கம், முகவரி மற்றும் மொபைல்போன் எண் மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 25 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர். ரிஷிவந்தியம் வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி , தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகன் முன்னிலை வகித்தனர். முகாமில், மின்னணு ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் சேர்த்தல், மொபைல் எண் மாற்றம், உறுப்பினர் பெயர் நீக்கம் உள்ளிட்ட 25 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ