உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு

கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு

திருக்கோவிலூர்: கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், தை மாத முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு அர்ச்சனை, சோடசோபவுபச்சார தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆரிய வைசிய சங்க தலைவர் வாசுதேவன், துணைத் தலைவர் கோல்டுரவி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை