மேலும் செய்திகள்
சொத்து தகராறில் 2 பேரை வெட்டியவர் கைது
14-Sep-2024
கள்ளக்குறிச்சி : மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலை, 55; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் அய்யப்பன், 29; குடிப்பழக்கம் உடையவர். இவர், நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சிக்கு பஸ் நிலையம் அருகே நின்றிருந்த தந்தை சோலையிடம் குடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளார்.அவர் தர மறுத்ததால், திட்டி, தாக்கினார். படுகாயமடைந்த சோலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சோலை கொடுத்த புகாரின் பேரில், அய்யப்பன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
14-Sep-2024