உள்ளூர் செய்திகள்

சூரசம்ஹார உற்சவம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் சூரசம்ஹார வைபவம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார சஷ்டி வைபவத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்தி தெய்வங்கள் மற்றும் வள்ளி, தெய்வாணை, சுப்ரமணியர் மற்றும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், பெருவங்கூர் சாலை சங்கரலிங்க சுவாமி சித்தர்பீடம், ஏமப்பேர் விஸ்வநாதர், இந்திலி பாலசுப்ரமணியர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சின்னசேலம் கங்காதீஸ்வரர், விஜயபுரம் செல்வமுருகன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் சூரசம்ஹார வைபவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை