மேலும் செய்திகள்
கூட்டுறவு வார விழா ரத்த தான முகாம்
20-Nov-2024
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி கால்நடை மருத்துவ முகாம், கருத்தரங்கம், ரத்ததான முகாம், கூட்டுறவு பொருட்களின் விற்பனை மேளா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.இறுதி நாளான நேற்று முன்தினம் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. சின்னசேலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற தனிதிறன் போட்டிகளும் கைப்பந்து, இறகு பந்து, கோகோ போன்ற பல்வேறு குழு போட்டிகளும் நடத்தப்பட்டது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.கூட்டுறவு சங்ககளின் இணைப் பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணை பதிவாளர்கள் சுகுந்தலதா, குறிஞ்சிமணவாளன், திருக்கோவிலுார் கூட்டுறவு நகர வங்கி செயல் ஆட்சியர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார். போட்டிகளில் கூட்டுறவு சார்பதிவாளர்கள், அலுவலர்கள், செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
20-Nov-2024