உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  இரு சிறுமிகள் உட்பட மூன்று பேர் மாயம்

 இரு சிறுமிகள் உட்பட மூன்று பேர் மாயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாயமான இரு சிறுமிகள் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 9 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பகண்டை கூட்ரோடு அடுத்த அவிரியூர் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்கில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நீலமங்கலம் கூட்ரோடு சேர்ந்த பச்சமுத்து மகள் மணிமேகலை, 42; இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். கடந்த 10ம் தேதி காலை 10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை