உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மதுபாட்டில் விற்ற இருவர் கைது

 மதுபாட்டில் விற்ற இருவர் கைது

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று பல்ராம்பட்டு பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்பனை செய்த அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வகுமார், 37; மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் குணசேகரன், 43; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை