உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா கடத்திய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.உளுந்துாபேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது மற்றும் போலீசார் கடந்த, 29ம் தேதி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், 2 கிலோ கஞ்சா கடத்திய ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், காந்தி நகரைச் சேர்ந்த மதிமாறன் மகன் ராம்பிரசாத், 24; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார், 21; ஆகிய இருவரை கைது செய்து, விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரசாந்த், இந்த இருவரையும்குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை