உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மாதம், காலாண்டு, அரையாண்டு என பல்வேறு கால இடைவெளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்த காலாண்டு ஆய்வு நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், சேமிப்பு கிடங்கு திறந்து ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது தேர்தல் தாசில்தார் பரந்தாமன், சப் கலெக்டர் (பயிற்சி) சுபதர்ஷினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை