மேலும் செய்திகள்
கணவன் மாயம்: மனைவி புகார்
30-Mar-2025
கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியை சேர்ந்தவர் விஜய் மனைவி செல்வி,34; இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 20ம் தேதி இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜய் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-Mar-2025