உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

கச்சிராயபாளையம்: நல்லாத்துார் கிராமத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார். கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 45; இவரது மனைவி ரேவதி, 44; இவர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 மகள்கள் உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ரேவதி கடந்த 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை