மேலும் செய்திகள்
சாலை விபத்தில் தொழிலாளி பலி
23-Oct-2024
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழந்து கூலி தொழிலாளி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரைச் சேர்ந்தவர் சரவணன்,48; கூலி தொழிலாளி. இவருக்கு மதுபழக்கும் உள்ளது. கடந்த 2 ம் தேதி இரவு 11.30 மணியளவில் மதுபோதையில் வீட்டின் மாடி படிக்கட்டில் இருந்து சரவணன் தவறி விழுந்துள்ளார். உடன் அவரை மீட்டு வீட்டில் படுக்க வைத்த நிலையில், மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Oct-2024