உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் இரு தினங்களுக்கு முன், ரோந்து சென்றனர். அப்போது, தென்கீரனுார் சடையப்பர் கோவில் அருகே, அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் திருநாவுக்கரசு,18; என்பவர் கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை