மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து ஓட்டுனர் பலி
02-Sep-2024
ஸ்ரீபெரும்புதுார்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் தாகூர், 40; மதுரமங்கலம் அருகே, கண்ணதாங்கல் கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில், நேற்று வழக்கம் போல பணியில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்து வமனைக்கு அனுப்பினர்.அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
02-Sep-2024