உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வளத்தாஞ்சேரி சாலையில் தடுப்பு இல்லாத வளைவு

வளத்தாஞ்சேரி சாலையில் தடுப்பு இல்லாத வளைவு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தத்தனுார் ஊராட்சி வழியே, வளத்தாஞ்சேரி - பேரிஞ்சாம்பாக்கம்செல்லும் பிராதன சாலை செல்கிறது. இந்த சாலை வழியே, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில், வளத்தாஞ்சேரி அருகே சாலை வளைந்து செல்கின்றது.இந்த நிலையில் தடுப்பு இல்லாத வளைவில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்துவிபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவு இருப்பதுதெரியாமல் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள வளைவுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை