காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் நாளை துவக்கம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில், கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி, 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.அதன்படி, நடப்பாண்டு பிரம்மோற்சவம், நாளை, அதிகாலை 4:45 மணி முதல், 5:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நாளை மறுதினம், சந்திரபிரபை, 5ம் தேதி யானை வாகனம், 6ம் தேதி தங்க சூர்ய பிரபை, 7ம் தேதி தங்க பல்லக்கு, 8ம் தேதி முத்து சப்பரம், 9ம் தேதி ரதம், 10ம் தேதி குதிரை வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.உற்சவத்தையொட்டி தினமும், காலை, மாலையில், காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலாவருகிறார்.இதில், ஒன்பதாம் நாள், பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உற்சவம், வரும், 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது. உற்சவத்தையொட்டி தினமும் வேதபாராயணமும், கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.13ம் தேதி தங்க காமகோடி விமானம், 14ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சி புரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர்,செயல் அலுவலர் ராஜலட்சுமி, மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள்செய்துள்ளனர்.