கூட்டுறவு பணியாளர்கள் 13ல் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் இயங்கி வருகிறது. இங்கு, செப்., 13ம் தேதி, காலை 10:30 மணி அளவில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களின் குறைபாடுகளை புகார் மனுக்களாக அளிக்கலாம் என, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்து உள்ளார்.