உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உணவகங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் நெடுஞ்சாலையில் விபத்து; அபாயம்

உணவகங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் நெடுஞ்சாலையில் விபத்து; அபாயம்

திருவள்ளூர்: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தற்போது அதி விரைவு நெடுஞ்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த விரைவுச் சாலை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த நெடுஞ்சாலையோரம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம், செட்டிப்பேடு, தண்டலம், ஸ்ரீபெரும்புதுார், மாம்பாக்கம் ஆகிய பகுதியில் இணைப்பு சாலையில் உள்ள உணவகங்களில், சாப்பிட அதி விரைவு நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.அதிவிரைவு நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை இருந்தும் உணவகங்களுக்கு வரும் வாகனங்கள் இணைப்பு சாலையில் நிறுத்தாமல், நெடுஞ்சாலையிலேயேநிறுத்துகின்றனர்.இவ்வழியே ரோந்து பணி மேற்கொள்ளும் காவல் துறையினர், இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.உணவகம் முன் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருவதோடு, விபத்துக்களும் ஏற்படுகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில், உணவகங்கள் முன் நிறுத்தப்படும்வாகனங்களை கட்டுப்படுத்த தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ