சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு ஏரிக்கரையோரம், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதோடு, மேல்பாகத்தில் சிமென்ட் காரை உதிர்ந்த நிலையில் உள்ளது. சாய்ந்து வரும் மின்கம்பம், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது முற்றிலும் சாய்ந்து விழுந்தால் பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சிதிலமடைந்த சாய்ந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.