உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காவிதண்டலம் கூட்டுச்சாலையில் வேகத்தடைக்கு வலியுறுத்தல்

காவிதண்டலம் கூட்டுச்சாலையில் வேகத்தடைக்கு வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் இருந்து, காவிதண்டலம் வழியாக, களியப்பேட்டை செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த இணைப்பு சாலையில், காவிதண்டலம் அருகே பிரிந்து விச்சூர் வழியாக செல்கின்ற மற்றொரு சாலை உள்ளது.மூன்று கிராமங்களை இணைக்கும் இந்த கூட்டுச்சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. களியப்பேட்டையை சுற்றி யுள்ள கிராமத்தினரும், விச்சூர் திருவானைக்கோவில், மாம்பாக்கம் போன்ற பகுதியினரும் இருசக்கர வாகனம் வாயிலாக, இச்சாலை வழியாக தினசரி செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.அதிக போக்குவரத்து உள்ள இச்சாலையில், வாகன ஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இதனால், மூன்று கிராமங்களுக்கான கூட்டுச்சாலை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.எனவே, இக்கூட்டுச்சாலை அருகே, காவிதண்டலம் நோக்கிய சாலை பகுதியிலும், களியப்பேட்டை மார்க்கமான சாலை மற்றும் விச்சூர் கிராமத்திற்கு பிரியும் சாலை பகுதிகளிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி