காஞ்சி காமாட்சியம்மன் மகரம் வாகனத்தில் உலா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.இரண்டாம் நாள் உத்சவமான நேற்று காலை, மகர வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் வீதியுலா வந்தார்.இன்று காலை, தங்க சிம்ம வாகனம், இரவு யானை வாகனத்திலும் உலா வர உள்ளார்.நான்காம் உத்சவமான நாளை காலை, தங்க சூரிய பிரபையிலும், இரவு தங்க ஹம்ஸ வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வர உள்ளார்.ஒன்பதாம் நாள், பிரபல உத்சவமான வெள்ளி ரதம் உத்சவம், வரும் 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது.பிரம்மோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ஆதீன பரம்பரை கர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் உதவி ஆணையர், செயல் அலுவலர் ராஜலட்சுமி, கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் செய்துள்ளனர்.