மேலும் செய்திகள்
செல்வ விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம்
24-Aug-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், காவாந்தண்டலம் கிராமத்தில் கற்பக விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 8 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று, காலை 9:15 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன் உட்பட பலர் இணைந்து செய்திருந்தனர்.
24-Aug-2024