உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால பைரவருக்கு கும்பாபிஷேகம்

கால பைரவருக்கு கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நசரத்பேட்டை, மகாலிங்கம் நகரில் வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், கால பைரவருக்கும், வாராஹி அம்மனுக்கும் புதிதாக சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.இரு சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், கணபதி ஹோமம், லக்ஷ்மி பூஜை, ஹோமம், வாஸ்து சாந்தி, வேதாகாம பூஜை முதற்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தது.நேற்று, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து கால பைரவர் மற்றும் வாராஹி அம்மன் சன்னிதிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை