உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடமாநில வாலிபர் மர்ம மரணம்

வடமாநில வாலிபர் மர்ம மரணம்

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் அடுத்த வடகால் பகுதியில் உள்ள ‛சூப்பர் காஸ்' நிறுவனம் அருகே, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஒரகடம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லாலுசிங், 25, என்பது தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ