உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார், மே 20--ஒரகடம் அருகே, பனப்பாக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் வட்டம்பாக்கம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியாக ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், பனப்பாக்கம் பகுதியில் சாலையை கடந்து செல்லும் மழைநீர் கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு இல்லாமல் உள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக சாலையோர உள்ள மழைநீர் கால்வாயில் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.குறிப்பாக, இரவு நேரங்களில் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, வட்டம்பாக்கம் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ