/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / * செய்தி மட்டும் மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
* செய்தி மட்டும் மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் பாசன கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள், கோரைபுற்கள் வளர்ந்து, கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழை காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் நிலை உள்ளது.எனவே, செவிலிமேடு ஏரிநீர் செல்லும் பாசன கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.