மேலும் செய்திகள்
கல்லுாரி பட்டமளிப்பு விழா
23-Aug-2024
காஞ்சிபுரம்:சென்னை பல்கலைக்கழக மண்டல அளவில், கல்லுாரிகளுக்கு இடையே ஆடவர்களுக்கான 'ஹேண்ட் பால்' போட்டி, மதுராந்தகம் அக் ஷயா கலை கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது.முதல் அரை இறுதியில், சென்னை மாநில கல்லுாரியுடன் மோதிய காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி, 18 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு அரை இறுதியில் பெரி கலை கல்லுாரியுடன் மோதிய குருநானக் கல்லுாரி, 14 - 7 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இறுதி போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணி, குருநானக் கல்லுாரி அணி மோதியது. இதில், 24 - 14 கோல் கணக்கில், பச்சையப்பன் கல்லுாரி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.மதுராந்தகம் அக் ஷயா கலைக் கல்லுாரி முதல்வர் முருகதாஸ், சாம்பியன் பட்டம் வென்ற காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரிக்கு வெற்றி கோப்பையை வழங்கினார்.
23-Aug-2024