உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்தகரம் ராவணன் குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

புத்தகரம் ராவணன் குளம் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில், அன்னமார் கோவில் அருகே கிராமத்திற்கு சொந்தமான. 1 ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன். அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இக்குளம் இருந்து வந்தது.மாற்று குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்ட பின், அப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. பல ஆண்டுகளாக குளம் துார்வாரப்படாமல் உள்ளது. அவ்வப்போது, குளத்தின் கரை பகுதி மட்டும் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், குளம் துார்ந்து, மழைக்காலங்களில் போதுமான நீர் சேகரமாகாமல் விரைவாக வறண்டு போகும் நிலை உள்ளது. மேலும், குளத்திற்கான வரத்து கால்வாய்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.எனவே, பழமையான இந்த குளத்தை துார்வாரி, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை