| ADDED : ஜூலை 30, 2024 07:05 AM
ஸ்ரீபெரும்புதுார்: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து, 40 டன் எடையுள்ள இரும்பு ரோல்களை ஏற்றிகொண்டு, நேற்று காலை சென்னையை நோக்கி லாரி ஒன்று வந்தது. லாரியை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 24, ஓட்டினார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நினைவகம் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காலை நேரம் என்பதால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர்.ஸ்ரீபெரும்புதுார் போக்குவரத்து போலீசார், சாலை நடுவே கவிழ்ந்த லாரியை கிரேன் இயந்திரம் வாயிலாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.