புதர் மண்டிய வடிகால்வாய் விடிவு பிறப்பது எப்போது?
காஞ்சிபுரம், செப். 13-காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை, அப்பாவு நகரில் உள்ள சேக்கிழார் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழை நீர் வெளியேறும் வகையில், மாநகராட்சி சார்பில் சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது. இதன் காரணமாக, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.இதனால், மழை காலத்தில் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, ஓரிக்கை, சேக்கிழார் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் மண்டியுள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்றி, துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.