ஜனாதிபதி பாதுகாப்பு வாகனம் விபத்து 3 போலீசார் காயம்
படப்பை:ஜனாதிபதி பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தமிழகம் வந்தார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க, தர்மபுரியில் இருந்து சிறப்பு படை போலீசார், டெம்போ டிராவலர் வாகனத்தில், சென்னை விரைந்தனர். நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார்- - தாம்பரம் சாலையில், மணிமங்கலம் அருகே மலைப்பட்டு பகுதியை கடந்தபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது, டெம்போ டிராவலர் வாகனம் மோதியது. இதில், வேனில் பயணித்த சித்தை யன், 50, யூசப், 45, வேலுச்சாமி, 38, ஆகிய மூன்று போலீசார் காயம் அடைந்தனர். மூவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துகுறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.