உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

உத்திரமேரூர்:-வைப்பனை பகுதியில் 4 கிலோ கஞ்சா விற்ற நான்கு பேரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர். வைப்பனை கிராமத்தில் நேற்று முன்தினம் உத்திரமேரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வைப்பனை சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, 4 கிலோ கஞ்சா விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், 23, கோபிநாத், 25, விநாயகம், 24, வல்லரசு, 19, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை