உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறைதீர் கூட்டத்தில் 412 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 412 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 412 பேர், பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல வகையிலான கோரிக்கை மனுக்களை, 412 பேர் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை