பூஞ்சோலை கன்னியம்மனுக்கு 46வது ஆண்டு ஆடி திருவிழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பூஞ்சோலை கன்னியம்மன் கோவிலில் 46வது ஆண்டு ஆடி திருவிழா, நாளை மறுநாள் நடக்கிறது.காஞ்சிபுரம், ராயன்குட்டை பள்ளத்தெருவில் உள்ள பூஞ்சோலை கன்னியம்மன் கோவிலில் 46வது ஆண்டு ஆடி திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது.விழாவையொட்டி நாளை காலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை 5:00 மணிக்கு காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் மண்டலி குழுவினரின் லலிதா சஹஸ்ரநாமம், சவுந்தர்யலஹரி பாராயணமும், தீபாராதனையும் நடக்கிறது.நாளை மறுநாள் காலை 7:00 மணிக்கு பூங்கரக அலங்காரமும், அம்மன் வீதியுலாவும், காலை 11:00 மணிக்கு பச்சையம்மன் பம்பை, உடுக்கை கைச்சிலம்பாட்ட குழுவினர் மூலம் அம்மன் வர்ணிப்பும், மாலை 3:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. பின், மூலவர் கன்னியம்மன் மகாசண்டி தேவி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.மாலை 6:00 மணிக்கு அம்பாள் வர்ணிப்பும், கும்ப பூஜையும், இரவு 7:00 மணிக்கு மஹாதீப ஆராதனையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.