மேலும் செய்திகள்
அடுத்தடுத்து 4 வீட்டில் திருட்டு
14-Nov-2024
மாங்காடு:குன்றத்துார், மாங்காடு காவல் நிலைய எல்லையில் சமீப காலமாக, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு, குன்றத்துாரை அடுத்த தரப்பாக்கம், கோல்டன் பேரடைஸ், கிருஷ்ணா கார்டன் பகுதியில், அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து, 1.50 லட்சம் பணத்தை, மர்ம நபர் திருடிச் சென்றார்.போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இரும்பு ராடுடன் வரும் மர்ம நபர், முகத்தில் டவலை கட்டிக்கொண்டு, வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது. விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, 33, என தெரிந்தது. கொத்தனாரான அன்பு, தான் பணியாற்றும் இடத்தின் அருகே பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் பூட்டை உடைத்து பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளார்.அந்த வகையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் 1.50 லட்சம் ரூபாய் பணம், 25 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரிந்தது. 25 சவரன் நகைகளை பறிமுதல் செய்த மாங்காடு போலீசார், அன்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
14-Nov-2024